அனுராதபுர மாவட்டத்தில் யானை மனித மோதல்கள் அதிகரிப்பதற்கு முக்கிய ஒரு காரணமாக அமைந்திருப்பது அந்த மாவட்டத்தில் உள்ள 05 யானை தாழ்வார பகுதிகளில் அனைத்தும் அந்தப் பகுதி மக்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கமத்தொழில், வனசீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமவீர கடந்த வாரம் அனுராதபுர மாவட்டத்தின் வனசீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஒரு கலந்துரையாடலை நடத்தினார். இந்த சந்திப்பில் கலந்துகொண்ட விவசாயிகளின் பிரதிநிதிகள் தமது பயிர்கள் வனசீவராசிகளினால் அழிக்கப்படுவதாகவும், விலங்குகளால் பயிர்கள் சேதப்படுத்தப்படுவதால், பயிர்களின் உற்பத்தி சரியாகக் கிடைப்பதில்லை என அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.
இல்கையில் தற்பொழுது முக்கியமாக 16 யானை தாழ்வாரப் பகுதிகள் காணப்படுகின்றன. அந்த அனைத்து யானை தாழ்வாரப் பகுதிகளையும் மனிதனின் செயற்பாடுகளினால் யானைகள் இழந்துள்ளன. இதனால் தற்போது யானை மனித மோதல்கள் உக்கிரமடைந்துள்ள 03 யானை தாழ்வாரப் பகுதிகளையும் அடுத்த ஆண்டு அதில் குடியேறியுள்ள அனைவரையும் அகற்றி, காட்டு யானைகள் சுமுகமாக நகரக் கூடிய வகையில் மீண்டும் சரிசெய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு, ஏனைய 13 யானை தாழ்வாரப் பகுதிகளை விடுவிப்பதற்கும், அவற்றை ஆக்கிரமித்திருக்கும் நபர்களுக்கு நஷ்டஈடுகளையும் மற்றும் அவர்கள் வசிப்பதற்கு பொருத்தமான வேறு காணிகளையும் பெற்றுக் கொடுப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அனுராதபுர மாவட்டத்தில் உள்ள 05 யானை தாழ்வாரப் பகுதிகள் அடங்கலாக 16 யானை தாழ்வாரப் பகுதிகளையும் விடுவிப்பதன் மூலம் மனித யானை மோதல்களை ஆகக்குறைந்த்து 50% வீதத்தினால் குறைக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த யானை தாழ்வாரப் பகுதிகள் அனைத்தும் உள்ளடங்கும் வகையில் பயிர் நிலங்கள், வணிக ஸ்தலங்கள், கட்டிடங்கள் மற்றும் சிறு கைத்தொழிற்சாலைகள் போன்ற பல்வேறு நிர்மாண செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதால் காட்டு யானைகளுக்கு சுதந்திரமாக யானை தாழ்வாரப் பகுதிகளின் ஊடாக நடமாடுவதற்கு முடியாதுள்ளது. அத்தகைய சந்தர்ப்பங்களில் யானைகள் மனித உயிர்களையும் சொத்துக்களையும் அழிப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.