இந்தியாவில் இருந்து கவறா என்றழைக்கப்படும் ஒரு பசு மாட்டு இனத்தை இறக்குமதி செய்து இந்த நாட்டிலுள்ள காடுகளில் மேய விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஒரு சில ஊடகங்களிலும் மற்றும் சமூக ஊடகங்களிலும் பல கருத்துக்கள் தற்பொழுது வெளியாகி வருகின்றன.
இது பற்றி இன்று (19) ஆம் திகதி காலையில் வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திருமதி சந்திரா ஹேரத் அவர்கள் வனசீவராசிகள் திணைக்களம் மற்றும் தேசிய வன விலங்குகள் திணைக்களம் ஆகியன சார்பாக விடயங்களை கேட்டறிந்தார்கள்.
செயலாளர் அவர்கள் விசாரித்தற்கு ஏற்ப கவறா என்றழைக்கப்படும் பசு மாட்டு இனத்தை இலங்கைக்கு இறக்குமதி செய்வது பற்றி வனசீவராசிகள் திணைக்களத்திடம் அல்லது தேசிய வன விலங்குகள் திணைக்களத்திடம் இது வரை எந்த ஒரு நபரும் அல்லது அமைப்பும் அவ்வாறு வினவவில்லை. அதே போல் அந்த திணைக்களங்கள் இரண்டிற்கும் இது வரை எந்த ஒரு தகவலும் தெரியாது எனவும் அந்த இரண்டு திணைக்களங்களினதும் பணிப்பாளர் நாயகங்கள் சுட்டிக் காட்டினார்கள்.
ஆகையால் கவறா என்றழைக்கப்படும் மாட்டு இனத்தை இலங்கைக்கு இறக்குமதி செய்வது தொடர்பாக வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு திணைக்களம் எந்த ஒரு தலையீட்டையும் செய்யாது அல்லது அதற்கு தெரியாது என அமைச்சின் செயலாளர் திருமதி சந்திரா ஹேரத் அவர்கள் குறிப்பிட்டார்கள்.