நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்பட்டு நான்காவது நாளாக நேற்று (21) 282 மெற்றிக் டொன் நெல்லை நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்துள்ளது.
இதன்படி, 4 நாட்களுக்குள் நெல் சந்தைப்படுத்தல் சபை 1126 மெற்றிக் டொன் நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்ததாக சபையின் தலைவர் நீல் டி அல்விஸ் தெரிவித்தார்.
நேற்று (21) நெல் அறுவடை மற்றும் கதிரடிக்கப்பட்ட பகுதிகளில் நெல் கொள்வனவு செய்ய 73 களஞ்சியசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.
.