කෂකරම සහ වවල කරමනත අමත යශය 3

   



தீவின் 86 கிராமங்களில் 45,000 செவ்விளநீர் தென்னை மரங்களை நடுகை செய்யும் திட்டம்

king Coconut1

எமது நாட்டில் செவ்விளநீர் தென்னைப் பயிர்ச்செய்கையை விஸ்தரிக்கும் ஒரு வேலைத் திட்டத்தைத் தயாரிக்க தென்னைப் பயிர்ச்செய்கை சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாடளாவிய ரீதியில் செவ்விளநீர் தென்னையைப் பயிரிடுவதற்கு பொருத்தமான 86 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. செவ்விளநீர் உற்பத்திக்கான காரணங்களை ஆராய்ந்து மேற்குறித்த கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும்.

எமது நாட்டின் செவ்விளநீருக்கு சர்வதேச சந்தையில் பெரும் கேள்வி ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் செவ்விளநீர் மீதான ஏகபோக உரிமை இலங்கைக்கு கிடைத்துள்ளது. எமது நாட்டின் செவ்விளநீரினது அதிக சுவையும், தரமும் இதற்கான காரணமாகும்.

மேலும் பல நாடுகள் செவ்விளநீர் தென்னையைப் பயிரிடுவதற்கு முயற்சிக்கின்றன. எனினும், இலங்கையில் செவ்விளநீரின் தரத்தை இன்னும் அடைந்து கொள்ள முடியவில்லை. எனினும், எமது நாட்டில் செவ்விளநீருக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

செவ்விளநீர் செய்கையை ஒரு பயிராகப் பிரபலப்படுத்துவது பற்றிய கலந்துரையாடல் நேற்று (05) விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் திரு மகிந்த அமரவீர அவர்களின் தலைமையில் நடைபெற்றது. தென்னைப் பயிர்ச்செய்கை சபை மற்றும் தென்னை அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தென்னை ஆராய்ச்சி நிறுவகம் என்பவற்றின் உத்தியோகத்தர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அதன்படி, தீவின் 86 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அந்தக் கிராமங்களில் 45,000 செவ்விளநீர் நடுகைக்கன்றுகளை நடுகை செய்ய தீர்மானிக்கப்பட்டது. கிராமங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கிராமத்திலும் அதிகளவான ஏக்கர்களில் செவ்விளநீர் நடுகைக்கன்றுகளைப் பயிரிடுவதற்கு எவரேனும் நபருக்கு அவசியமாயின், அதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

இதன் கீழ் செவ்விளநீர் நடுகைக்கன்றுகளும், தொழில் நுட்ப அறிவும் மற்றும் ஆலோசனைகளும் இலவசமாகப் பெற்றுக் கொடுக்கப்படும்.

இதன்படி மொனராகலை மாவட்டத்தில் 03 கிராமங்களும், மாத்தறை மாவட்டத்தில் 01 கிராமும், குருனாகல் மாவட்டத்தி 08 கிராமங்களும், குளியாப்பிட்டிய பிரதேசத்தில் 09 கிராமங்களும், கேகாலை மாவட்டத்தில் 08 கிராமங்களும், கம்பஹா மாவட்டத்தில் 09 கிராமங்களும், களுத்துறை மாவட்டத்தில் 10 கிராமங்களும், மாறாவிலப் பிரதேச்ததில் 09 கிராமங்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் 04 கிராமங்களும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 08 கிராமங்களும், அனுராதபுர மாவட்டத்தில் 02 கிராமங்களும், திருகோணமலை மாவட்டத்தில் 02 கிராமங்களும், பொலன்னறுவ மாவட்டத்தில் 02 கிராமங்களும், அம்பாறை மாவட்டத்தில் 04 கிராமங்களும், மாத்தளை மாவட்டத்தில் 04 கிராமங்களும், காலி மாவட்டத்தில் 08 கிராமங்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 02 கிராமங்களும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 03 கிராமங்களும், கண்டி மாவட்டத்தில் 04 கிராமங்களும் என மொத்தம் 86 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது கருத்து தெரிவித்த விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் திரு மகிந்த அமரவீர, இந்த நாட்களில் நிலவுகின்ற வறட்சியான காலநிலை காரணமாக செவ்விளநீரின் தேவையும் அதிகரித்துள்ளதோடு விலையும் அதிகரித்துள்ளது.

ஆனால், ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு, இந்தப் பயிர்ச்செய்கைகளை ஆரம்பிப்பதன் மூலம், விவசாயிகள் அதிக வருமானத்தைப் பெறலாம். மேலும் பெறுமதி சேர்க்கப்பட்ட ஒரு உற்பத்தியாக செவ்விளநீரை சந்தையில் அறிமுகப்படுத்த புதிய தொழில் நுட்பங்கள் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது.

சமூக வலையமைப்பு

     கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்