இரசாயன பசளைகளின் தகாத பாவனையினால் உள்ளூர் விவசாயிகளும் நுகர்வோரும் கடுமையான சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகவும், ஒரு நிலையான தீர்வாக, கரிம உரங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும்விவசாயிகளுக்கு மத்தியில் அத்தகைய உரங்களை பிரபலப்படுத்துவதற்கும் அவசியமான ஒரு திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என கமத்தொழில் அமைச்சர் கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே அவர்கள் கூறினார்கள். இரசாயன உரங்களின் தகாத பாவனையால் ஏற்படும் சுற்றாடல் பிரச்சினைகளுக்கும் மற்றும் சுகாதார பிரச்சினைகளுக்கும் ஒரு நிலையான தீர்வை வழங்கும் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் கனவை நனவாக்கக் கூடியவகையில்உள்ளூர் விவசாயிகளை கரிம உரங்களின் பாவனையின் பால் ஊக்குவிப்பதற்காகஅமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த கலந்துரையாடலின் போது, கமத்தொழில் அமைச்சர் அவர்கள், விவசாயத்தின் முன்னேற்றத்திற்கும் மக்களின் ஆரோக்கியத்திற்கும் ஒரு சிறந்த முடிவை எடுத்தார்கள். ஆரோக்கியமான ஒரு தலைமுறையை உருவாக்குவதில் கவனம் செலுத்தி,குறிப்பாக நச்சு அல்லாத உணவு மூலம், கரிம உரங்களின் பாவனையை ஊக்குவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் அவர்கள் வலியுறுத்தினார்கள்.
இரசாயன உரங்களின் தகாத பாவனையினால் ஏற்படக் கூடிய சுகாதார பிரச்சினைகளையும் மற்றும் சுற்றாடல் பிரச்சினைகளையும் குறைக்கும் நிமித்தம் பல நடவடிக்கைகளை எடுப்பதில் கவனம் செலுத்தப்பட்டது.
அதற்கிணங்க,
கௌரவ மஹிந்தானந்தா அலுத்கமகே அவர்கள் மேலும் கூறுகையில், அரசாங்க உர மானியத் திட்டத்தின் கீழ் கரிம உரங்களைப் பாவிக்கும் விவசாயிகளின் மானிய அளவை அதிகரிப்பதற்கான தேவையையும் மற்றும்அவர்களின் தயாரிப்புகளை அதிக விலைக்கு வாங்குவதற்கான தேவையையும் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் கூறினார்கள்.
அதன்படி, இந்த திட்டம் ஜனவரி 2021 முதல் இயக்கப்படும், இதன் மூலம் உள்ளூர் கரிம உரங்களின் பயன்பாடு 03 ஆண்டுகளுக்குள் 30%வீதம்வரை அதிகரிக்கப்படும்.
இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர், இராஜாங்க அமைச்சுகளின் செயலாளர்கள், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் கரிம உர கம்பனிகளின் பிரதிநிதிகள் ஆகிய பலரும் கலந்து கொண்டனர்.